முகப்பு
செய்திகள்

நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் மோதல்: நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு!

நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இன்று நடைபெற்று வரும்  நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் திடீர் மோதல்  ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த தள்ளுமுள்ளுவில் நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸின் கார் கண்ணாடி.

செய்திகள்

நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் மோதல்: நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு!

நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இன்று நடைபெற்று வரும்  நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் திடீர் மோதல்  ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த தள்ளுமுள்ளுவில் நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸின் கார் கண்ணாடி.

Updated On : 25 ஜனவரி, 2024 at 6:27 AM
பகிர்:

சென்னை: நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இன்று நடைபெற்று வரும்  நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் திடீர் மோதல்  ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த தள்ளுமுள்ளுவில் நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.   

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் முதலில் லயோலா கல்லூரியில் நடப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் லயோலா கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டமானது சென்னை தி நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்திலேயே இன்று மதியம் 2 மணிக்கு துவங்கியது. தற்பொழுது சங்க தலைவர் நாசர் தலைமையில் கூட்டம் நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆயிரக் கணக்கான நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் தமிழ் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்தும், அடுத்த ஆண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் பொதுக் குழு கூட்ட அரங்கிலும், அதற்கு வெளியேயும் 'திடீர்' தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உறுப்பினர் அடையாள அட்டை இல்லாத யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன் காரணமாக உறுப்பினர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அடையாள அட்டை இல்லாத சில சங்க உறுப்பினர்களுக்கும், அவர்களைத் தடுத்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

மோதல் அதிகரித்ததால் பாதுகாப்பிற்காக நடிகர் சங்கத்தின் நுழைவாயிலை அங்கிருந்த போலீசார் இழுத்து மூடினர். மேலும் அடையாள அட்டை இல்லாமல் கூட்டத்திற்கு வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறார்கள்.  இந்த அமளியில் சங்க வளாகத்திற்கு வெளியே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. கார் கண்ணாடியை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி கருணாஸின் ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →