திரைப்படத்தில் பாடல்களை படமாக்குவதில் மணிரத்னம் வல்லவர் என்று பாவுட்டின் பிரபல பெண் நடன இயக்குனர் ஃபாரா கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
இதுவரை நான் இணைந்து பணிபுரிந்தவர்களில் மணிரத்னம் அவர்கள் மிகச் சிறந்த படைப்பாளர். அவருடன் இனைந்து பணிபுரிந்த படங்களில் 'தில்சே'(இந்தி உயிரே) மற்றும் 'அலைபாயுதே' ஆகிய இரண்டு படங்களும் சிறப்பானவை. பாடல்களை படமாக்குவதில் அவரிடம் ஒரு சிறப்பு தன்மையிருக்கிறது.
சில முறை வேண்டுமானால் அந்த பாடல்கள் படத்துடன் சிறப்பாக இணைந்து போகாமல் இருக்கலாம். ஆனால் தனியாக பார்க்கும் போது உங்களால் அதை விரும்பாமல் இருக்க முடியாது.
இவ்வாறு ஃபாரா கான் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.