குறும்படம் மூலம் கிடைத்த வாய்ப்பு: ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன்
மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும்...
பாரதிராஜா - விதார்த் இணைந்து நடிக்கும் படமான ‘குரங்கு பொம்மை’யை இயக்கியுள்ளார் நித்திலன். கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் நித்திலன் கூறும்போது:
மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக்கொண்டே இருக்கும். அதன் குறியீடாக வைத்து ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியிருக்கிறேன். இதில் விதார்த்துக்கு அப்பாவாக இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். வித்தார்த்துக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் என்ற கேரளப் பெண் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் அப்பா, மகனுக்கும் இடையேயான ஒரு பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். ஒரு நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பைக் கதைக்கருவாக வைத்து படம் இயக்கியுள்ளேன்.
இப்படத்தின் மூலம் அஜனீஷ் லோக்நாத் என்கிற இசையமைப்பாளர் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. மொத்தம் 3 பாடல்கள். இதில் நா.முத்துக்குமார் 2 பாடல்களை எழுதி இருக்கிறார்.
நடிகர் விதார்த் என்னுடைய ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்கிற குறும்படத்தை பார்த்து என்னை அழைத்தார். என்னைப் பாராட்டி ஒரு படம் பண்ணலாம் என்று கூறினார். நானும் ‘குரங்கு பொம்மை’ படத்தின் கதையைக் கூறினேன். கதை அவருக்குப் பிடித்தது.
பின்னர், பாரதிராஜா சாரிடம் கதையை சொல்ல முதலில் தங்கினேன். அவரை சந்தித்து கதையைச் சொன்னேன். கேட்டவுடனே நன்றாக இருக்கிறது என்னுடைய குறும்படத்தை அவர் ஏற்கெனவே பார்த்துப் பாராட்டியிருக்கிறார். இந்தப்படம், என்னுடைய ‘புதிர்’குறும்படத்தின் தாக்கத்தில் உருவானது என்றார்.