பி.சி. முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மதுர வீரன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
இன்று நடைபெற்ற பூஜையில் விஜயகாந்த் கலந்துகொண்டார்.
சண்முகபாண்டியன், சகாப்தம் என்கிற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு தமிழன் என்று சொல் என்கிற படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. தற்போது மதுர வீரன் படம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் பி.சி. முத்தையா இயக்கும் முதல் படம் இது.