செய்திகள்

ஏக்கத்துடன் பாடினேன்: வான் வருவான் பாடிய அனுபவம் பற்றி பாடகி சாஷா திருப்பதி

இப்பாடலை மணி ரத்னம் சார் அற்புதமாக காதல் உணர்வுடன் படமாக்கியுள்ளார்...

எழில்

மணி ரத்னம் இயக்கிவரும் காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி போன்றோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரவிவர்மன், இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

காற்று வெளியிடை படம் ஏப்ரல் 7-ம் தேதி வெளிவரவுள்ளது. வழக்கமாக தமிழ்ப் புத்தாண்டுத் தினத்தில் புதிய படங்கள் வெளியாகும். ஆனால் காற்று வெளியிடை அதற்கு ஒருவாரத்துக்கு முன்பே வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் வான் வருவான் பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடலைப் பாடிய அனுபவம் குறித்து பாடகி சாஷா திருப்பதி ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஒரு மாதத்துக்கு முன்பு பாடல் படமாக்கப்பட்டது. மிகவும் தீவிரத்துடனும் ஏக்கத்துடனும் பாடும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. இப்பாடலை மணி ரத்னம் சார் அற்புதமாக காதல் உணர்வுடன் படமாக்கியுள்ளார் என்றார்.

ஆந்திராவைச் சேர்ந்த சாஷா, காஷ்மீரில் பிறந்தவர். கனடாவில் பள்ளிப்படிப்பைப் பயின்றவர். தமிழில் பாடுவது குறித்து அவர் கூறியதாவது: எந்த மொழியிலும் பாடுவதற்கும் நீங்கள் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். அதேபோல உங்களுக்கு நல்ல ஆசான்களும் இருக்கவேண்டும். நான் தமிழைச் சரியாக உச்சரிக்கிறேன் என்றால் என்னுடைய இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், என்ஜினியர்கள் போன்றோர் முக்கிய காரணம். பாடல் வரிகளை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொள்வேன். பாடலாசிரியர்களிடம் உச்சரிப்பைக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். முக்கியமாக ல, ள, ழ போன்ற எழுத்துகளை எப்படி உச்சரிப்பது என்று கற்றுக்கொண்டு அதன்படி பாடுவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

SCROLL FOR NEXT