தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு போதிய பெரும்பான்மை பலம் இருந்ததால், அமைச்சரவை மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது.
மிகுந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளும் பரபரப்பான அரசியல் சூழலையும் இன்று காண நேர்ந்ததையடுத்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கூறியதாவது:
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும். இதுதான் இப்போது எல்லோரும் உணர்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு இனி நம்பிக்கை எதுவும் உள்ளதா? சட்டமன்றக் காட்சிகளை சிறுவர்களும் பார்க்கட்டும். இதிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளட்டும். ஜனநாயகத்தின் மோசமான தருணம் இது என்று கூறியுள்ளார்.