செய்திகள்

பாடகி சுசித்ராவின் சர்ச்சைக்குரிய ட்வீட்கள்: கணவர் விளக்கம்

DIN

பாடகி சுசித்ரா கடந்த ஒருவாரமாக ட்விட்டரில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தார்.

நடிகை பாவனாவுக்கு நிகழ்ந்த சம்பவத்துக்குப் பிறகு பலரும் தங்களுக்குத் திரையுலகில் நேர்ந்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக எழுதிவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதைச் சரிகட்டும் விதமாக சுசித்ராவின் செல்பி புகைப்படமும் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதனால் பயங்கர குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் சுசித்ராவின் கணவரும் நடிகருமான கார்த்திக் இந்த விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் கூறியதாவது:

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இதனால் எங்கள் குடும்பமே மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இன்று அவருடைய ட்விட்டர் கணக்கை மீட்டுவிட்டோம். கடந்த சில நாள்களாக வெளிவந்த ட்வீட்களை சுசித்ரா வெளியிடவில்லை. அவை அனைத்தும் போலியானவை. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். அவர்களுக்கு இது எந்தளவுக்கு மன அழுத்ததை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் அறிவேன். ஊடகங்கள் இதைப் பரபரப்பாக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT