செய்திகள்

தயாரிப்பாளர்கள் எதிரிகள் அல்ல: ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

DIN

தயாரிப்பாளர்கள் திரைப்பட தொழிலாளர்களின் எதிரிகள் அல்ல என்று ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

சம்பள விவகாரத்தில் ஃ பெப்சி தொழிலாளர்களின் மனநிலையை தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே வேளையில் தயாரிப்பாளர்களை காக்கும் பொறுப்பு தொழிலாளர்களுக்கு இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறு முதலீட்டு படங்களுக்கு எங்கள் தொழிலாளர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். நடிகர், நடிகைளின் சம்பளத்தை குறைத்தாலே பாதி பிரச்னைகள் தீர்ந்து விடும். அதில் கவனம் செலுத்துமாறு தயாரிப்பாளர் சங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர்கள் எங்களின் எதிரிகள் அல்ல. முதலாளிகள் என்பதை உணர்கிறோம். ஒரே கப்பலில்தான் எல்லோரும் பயணிக்கிறோம். சரியாகச் செலுத்தவில்லை என்றால் கப்பல் மூழ்கிவிடும். அதைக் காப்பாற்றும் வகையில் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும். தயாரிப்பாளர் என்பவர் படத்தை எடுத்தவுடன் போய்விடுவார். ஆனால் எவ்வித கணக்கும் பார்க்காமல் தொழிலாளர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே இருப்பவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ஆர்.கே.செல்வமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT