செய்திகள்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் படம் இயக்குகிறார் சீமான்

எழில்

இயக்குநரும் நடிகருமான சீமான் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் படம் இயக்கத் தயாராகி வருகிறார். 

கோபம் என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தை இயக்கும் சீமான், இதற்கான கதையை ஜி.வி. பிரகாஷிடம் கூறியுள்ளார். உடனே அவரும் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டுப் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் குரல் கொடுத்து வருபவர் ஜி.வி. பிரகாஷ். இந்நிலையில் சீமான், ஜி.வி ஆகிய இருவரும் கைகோர்ப்பதால் தமிழ்நாட்டுப் பிரச்னைகளை உள்ளடக்கிய கதையாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2008-ல் வாழ்த்துகள் படத்தை இயக்கிய சீமான் அதன்பிறகு அரசியல் களத்தில் தீவிரமாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குக்குப் பிறகு அவர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT