இந்தியாவின் முதல் 8கே படத்தில் பிரபுதேவா!
இந்தப் படத்தில் ஒரு சிறப்பம்சம் - 8கே ரெசொல்யூஷன் தொழில்நுட்பம் கொண்ட கேமராவில் படமாக்கப்படுகிறது.
"டோரா', "அறம்' என தன்னை முன்னிலைப்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா தற்போது "கொலையுதிர் காலம்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இப்போது இந்தப் படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளது.
"உன்னைப் போல் ஒருவன்', "பில்லா 2' படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி, கொலையுதிர் காலம் படத்தை இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் யுவன் இப்படத்தின் தயாரிப்பாளர்.
ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற "ஹஷ்' படத் தழுவலாக இப்படம் உருவாகி வருகிறது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர், வீட்டில் தனியாக இருக்கும்போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவரிடமிருந்து தப்பித்தாரா என்பது தான் "ஹஷ்' படத்தின் திரைக்கதை. ஹஷ் படத்தின் பிரதான கதாபாத்திரத்தின் சாயல், "கொலையுதிர் காலம்' படத்தின் பிரதான கதாபாத்திரத்திலும் இருக்கும். மற்றபடி "ஹஷ்' படத்துக்கும் எங்களது படத்துக்கும் சம்பந்தமில்லை எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
Advertisement
இந்நிலையில் கொலையுதிர் காலம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளார் சக்ரி டோலட்டி. இதில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஒரு சிறப்பம்சம் - 8கே ரெசொல்யூஷன் தொழில்நுட்பம் கொண்ட கேமராவில் படமாக்கப்படுகிறது. இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பத்துடன் படமாக்கப்படும் முதல் படம் இது. ஹாலிவுட்டில் 2013 முதல் இத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
காமோஷி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். பூமிகாவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவுள்ளது.
Related Article
டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளிவருகிறது கமல் நடித்த ஆளவந்தான்: தாணு அறிவிப்பு
ஜிவி பிரகாஷ் நடிப்பில் படம் இயக்குகிறார் சீமான்
இயக்குநர் வேலு பிரபாகரன் - நடிகை ஷெர்லி தாஸ் திருமணப் புகைப்படங்கள்!
'பே வாட்ச்' படத்தை வெளியிட தடையில்லை: உயர்நீதிமன்றம்
டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்