முகப்பு
செய்திகள்

ஆடை விமரிசனம்: கவலைப்படாத ப்ரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா, சிவப்புக் கம்பள வரவேற்பில் அசத்தலான உடையில் கலந்துகொண்டார்.

Updated On : 1 மார்ச், 2017 at 10:46 AM
பகிர்:

2017-ம் ஆண்டுக்கான 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, சிவப்புக் கம்பள வரவேற்பில் அசத்தலான உடையில் கலந்துகொண்டார். விழாவுக்கு வருகை தந்தபோது அவர் புகைப்படக் கலைஞர்களால் அதிக கவனம் பெற்றார். இந்நிலையில் அவருடைய நவநாகரிகமான உடைக்கு விமரிசனங்களும் எழுந்தன.

இதுகுறித்து ப்ரியங்கா சோப்ரா ஒரு பேட்டியில் கூறியதாவது: என் உடைகள் குறித்த விமரிசனங்கள் எனக்குப் பழகிவிட்டன. எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ, எது எனக்குச் செளகரியமாக உள்ளதோ அதை அணிகிறேன். மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அது அவர்கள் விருப்பம் என்றார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.