முகப்பு
செய்திகள்

மெர்சல் சாதனை! வசூலில் நம்பர் 1 இடம் பிடித்தார் நடிகர் விஜய்!

ஒரு ஹீரோவின் மார்கெட் வால்யூ என்பது அவர்கள் குவிக்கும் வசூல் சாதனையில்

Updated On : 19 அக்டோபர் 2017, 7:08 pm IST
பகிர்:

ஒரு ஹீரோவின் மார்கெட் வேல்யூ என்பது அவர்கள் குவிக்கும் வசூல் சாதனையில் உள்ளது.  ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என உலகத் திரைப்படத்துக்கான இலக்கணம் இதுதான்.

அதுவும் ஸ்டார் வேல்யூ அதிகமுள்ள நடிகர்களை பொறுத்த வரையில் FDFS (First day first show) முதல் நாள் முதல் காட்சி மிகவும் முக்கியம். அது படத்தைப் பற்றிய ரசிகர்களின் முதல் ரியாக்‌ஷனை வெளிப்படுத்திவிடும். மீடியா விமரிசனங்கள், ஸ்டார் ரேட்டிங் என படத்தைப் பற்றிய கருத்துக்கள் வெளி வரும். சமூக வலைத்தளங்களிலும் அந்தப் படத்தைப் பற்றிய பதிவுகள் வைரலாகும்.

கமர்ஷியல் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியம், பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ் ஹீரோ படங்களுக்கு முதல் நாள் வசூல் லாபம் தருவதாக இருந்தால் தான் அவர் அந்த நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ள முடியும், படத் தயாரிப்பாளரும் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியும்.

Advertisement

Advertisement

தீபாவளி அன்று உலகம் முழுவதும் 3500 திரையரங்குகளில் வெளிவந்த மெர்சல் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. வசூலைப் பொருத்த வரையில் மெர்சல் தமிழ் நாட்டில் இதுவரை ரூ 22 கோடிக்கு மேல் முதல் நாளே வசூல் செய்துவிட்டது. இதற்கு முன் முதல் நாள் வசூலில் முதலிடத்தில் இருந்து வந்தது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கபாலி என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலியின் முதல் நாள் வசூல் ரூ 21.5 கோடி. சமீபத்தில் வெளியான விவேகம் ரூ 17 கோடி முதல் நாள் வசூல் சாதனை செய்திருந்தது. இவற்றை தாண்டிய மெர்சல் 22 கோடியை வசூலித்து தமிழகத்தின் வசூலில் நம்பர் 1 படமாகிவிட்டது. தளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய் வசூல் சாதனையில் முதல் இடத்திற்கு வந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments