பாகுபலிக்குப் பிறகு பாகமதியைத் தவிர அதிகப் படங்களில் அனுஷ்கா நடிக்கவில்லை. பாகுபலியின் பெரும் வெற்றியும் வரவேற்பும் உற்சாகம் அளித்தாலும் அதனைத் தொடர்ந்து அவர் கேட்டு வந்த பல கதைகள் அனுஷ்காவின் மனதைக் கவரவில்லை.
தற்போது பெண் மையக் கதையொன்றில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ‘சைலண்ட்’ என்ற பெயரில் உருவாகவிருக்கும் இப்படத்தை ஹேமந்த் மதுகர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் இயக்கவிருக்கிறார். இப்படத்தை ப்ளூ பிளானெட் எண்டெர்ட்யின்மெட் சார்பில் கிரண் ரெட்டி, பரத் செளத்ரி மற்றும் பீப்பிள் மீடியா ஃபாக்டரி விஸ்வ பிரசாத் ஆகியோர் தயாரிக்கின்றனர். கோணா வெங்கட் மற்றும் கோபி மோகன் திரைக்கதை எழுதுகின்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பின் அனுஷ்காவுக்கு மாதவன் ஜோடியாக நடிக்கிறார். அனுஷ்கா தமிழில் அறிமுகமான ரெண்டு படத்தில் அவருக்கு ஜோடி மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. திரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்தில் வசனங்கள் இல்லை. சியாட்டலில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் ஹாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க இயக்குநர் மதுகர் பேசி வருகிறார் என்றனர் படக்குழுவினர்.