விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைக் கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார். பிரச்னைகள் தொடர்பாகப் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும் என்று போராட்டம் நடத்தும் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கடந்த நிர்வாகம் சேமித்து வைத்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது என்றும் இவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள். மேலும் விஷால் குறித்து முதலமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதையடுத்து விஷால் பதவி விலகக் கோரி, சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் பூட்டு போட்டுள்ளார்கள்.