இந்த வாரம் வெளியாகவிருக்கும் இந்த 5 படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?
ஒரு படம் வெற்றி பெறுமா அல்லது தோல்வி அடையுமா என்பது அந்தப் படக்குழுவினருக்கு
ஒரு படம் வெற்றி பெறுமா அல்லது தோல்வி அடையுமா என்பது அந்தப் படக்குழுவினருக்கு படம் வெளியாகும் வரை ஏற்படும் டென்ஷன் ஜுரம். அதிக சிரமத்துக்குள்ளாகி எடுத்து முடித்த படம் திரை அரங்கு கிடைக்காமலோ அல்லது விநியோகிஸ்தர்கள் கிடைக்காமல் பெட்டியில் முடங்கிப் போவது சோகம். நடிகர்களின் எதிர்காலம் அந்த படப்பெட்டியில் தான் அடங்கியிருக்கிறது. சினிமா ஒரு கனவு உலகம் மட்டுமல்ல ஒரு மாபெரும் சூதாட்டம். வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே மாலை மரியாதை, தோல்வியடைந்தவர்கள் காணாமல் போவதுமுண்டு, அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்குவதும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மாயமான் வேட்டை.
இந்நிலையில் இந்த வாரம் பிப்ரவரி 16-ம் தேதி 'நாச்சியார், நாகேஷ் திரையரங்கம், மேல்நாட்டு மருமகன், வீரா, மனுசனா நீ' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றுள் நாச்சியார் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள படம். பொதுவாக ஒரு படத்தை முடிக்க ஒரு வருடத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளும் இயக்குநர் பாலா நாச்சியாரை விரைவில் முடித்துவிட்டார். படம் வித்யாசமான களனில் அமைந்துள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் பாராட்டி வருகின்றனர்.
வீரா உள்ளிட்ட பிற படங்கள் முன்பே வெளி வந்திருக்க வேண்டியவை. திரையரங்கம் கிடைக்காத நிலை உள்ளிட்ட தவிர்க்க முடியாத தாமதங்களால் தற்போது வெளிவருகின்றன. தேர்வு காரணமாக மார்ச் மாதத்தில் பெரிய படங்கள் எதுவும் வெளிவராது.
Advertisement
Advertisement
பிப்ரவரி மாதத்தில் இதுவரை 20 படங்கள் வெளிவந்திருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் வெற்றியடையவில்லை. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் முதலிடத்தில் இருப்பது காலா. காலா வெளியாகும்வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.