வெட்கம் இல்லாதவன்தான் சினிமாவில் நடிக்க முடியும்! சொன்னவர் யார்?
பீட்சா, ராமன் தேடிய சீதையில் போன்ற படங்களில் நடித்த ரம்யா நம்பீசனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் கிடைக்கவில்லை.
பீட்சா, ராமன் தேடிய சீதையில் போன்ற படங்களில் நடித்த ரம்யா நம்பீசனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் கிடைக்கவில்லை.
விஜய் சேதுபதியுடன், சேதுபதி படம் அவரது பெயர் சொல்லும் விதமாக அமைந்தது.
2016-ம் ஆண்டு பூஜை போடப்பட்ட படம் 'நட்புன்னா என்னானு தெரியுமா' இதில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்க, சரவணன் மீனாட்சி சீசன் 2வில் நடித்த கவின் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
Advertisement
Advertisement
நெல்சனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிவக்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் இப்படத்திற்கு தரண் இசையமைக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்கியராஜ் மிஷ்கின், கரு பழனியப்பன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு வாழ்த்தினர். கரு பழனியப்பன் பேசும் போது திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
ஹீரோ கவினுக்கு அறிவுரை கூறும்விதமாக, 'மிஷ்கின் சொன்னது போல நல்ல நடிகன் ஆகணும்னா வெட்கம் அவமானம் எல்லாவற்றையும் ஓரமாக வைத்துவிட்டு நடிக்க வரவேண்டும்' என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.