செய்திகள்

கடன் தொகை ரூ 6.2 கோடியை 3 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும்: லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

எழில்

கோச்சடையான் திரைப்படம் தொடர்பாக தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்துக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான "கோச்சடையான்' திரைப்படம் 2014-ஆம் ஆண்டு வெளியானது. கோச்சடையான் படத்தைத் தயாரிக்க, தனியார் நிறுவனத்திடம் வாங்கிய கடன் தொகையில் ரூ. 6.2 கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பிச் செலுத்தவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

மீதிப்பணத்தைத் திருப்பித் தருவது குறித்து பிற்பகல் 12.30க்குள் பதிலளிக்கவேண்டும். மீதிப்பணத்தைத் திருப்பித் தர முடியாது எனக் கூறினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் கோச்சடையான் படத்துக்கான கடன் தொகை ரூ 6.2 கோடியை 12 வாரங்களுக்குள் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT