முகப்பு
செய்திகள்

சத்ரியனாக பார்த்த என்னை சாணக்கியனாக பார்க்கப் போகிறீர்கள்: டி.ராஜேந்தர்

சினிமாவை விட அரசியல் சவாலானது என்பதால் சிம்புவை அரசியலில் விட விரும்பவில்லை. சிம்பு அரசியலுக்கு வந்தாலும் வரலாம், அது அவரது முடிவு...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

பிரபல இயக்குநரும் நடிகரும் இலட்சிய திமுக கட்சியின் தலைவருமான டி. ராஜேந்தர், ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

சிம்புவுக்கு நான் ஃபாதர் என்றால் சிம்பு ரசிகர்களுக்கு நான் காட் ஃபாதர். சினிமாவை விட அரசியல் சவாலானது என்பதால் சிம்புவை அரசியலில் விட விரும்பவில்லை. சிம்பு அரசியலுக்கு வந்தாலும் வரலாம், அது அவரது முடிவு.

என்னையும், சிம்புவையும் படம் நடிக்க விடாமல் தயாரிப்பாளர் சங்கம் சதி செய்கிறது.

வரும் 28-ம் தேதி எனது அரசியல் வாழ்வில் முக்கிய முடிவினை அறிவிக்க உள்ளேன். இவ்வளவு நாள்களாக சத்ரியனாக பார்த்த என்னை சாணக்கியனாக பார்க்கப் போகிறீர்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.