செய்திகள்

காற்றின் தேசம் எங்கும் உந்தன் கானம் சென்று தங்கும்: இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

வாழும் லோகம் ஏழும் - உந்தன் ராகம் சென்று ஆளும், வாகை சூடும் - காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன்...

எழில்

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், தொழில்- வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமையன்று (ஜன.25) பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டிலேயே 2-ஆவது உயரிய விருதாகும். 

இதையடுத்து கவிஞர் வைரமுத்து, இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் எழுதியுள்ளதாவது:

பத்ம விருதுகள்  பெறும் 85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்” 
- என்ற காதல் ஓவியம்  வரிகளால் வாழ்த்துகிறேன் என்று வைரமுத்து வாழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2027 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகள் நடைபெறுமா? அஸ்வின் கூறுவதென்ன?

தன்னடக்கத்துடன் இருங்கள்... ரிமா கல்லிங்கல் பகிர்ந்த வாழ்க்கைத் தத்துவம்!

ஜமா இயக்குநரின் புதிய படம்!

ஸ்டிரேஞ்சர் திங்ஸ் தொடரால் முடங்கிய நெட்பிளிக்ஸ்!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT