'பரியேறும் பெருமாள்' நாயகன் கதிரின் திருமணம் கோலாகலமாக நடந்தது!
திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர். அட்லி தனது மனைவி பிரியாவுடன் நேரில் சென்று வாழ்த்தினார்.
'மதயானைக் கூட்டம்' கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் நடித்துள்லவர் கதிர். அவரது நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் பாம் பரியேறும் பெருமாள்.
மேலும் 'சிகை', 'சத்ரு', ஆகிய படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார் கதிர். இப்படங்கள் விரைவில் வெளிவரும். இந்நிலையில், கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சஞ்சனாவுக்கும் ஈரோட்டில் நேற்று திருமணம் நடந்தது.
திருமணத்தில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர். அட்லி தனது மனைவி பிரியாவுடன் நேரில் சென்று வாழ்த்தினார். இம்மாத இறுதியில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த கதிர் திட்டமிட்டுள்ளார்.
Advertisement
கதிர் - சஞ்சனா தம்பதியருக்கு திரையுலகின் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.