செய்திகள்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடினார்! 

சினேகா

நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 24-ம் தேதி துபையில் மரணமடைந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதித்தது.

தாயை இழந்த ஜான்வி கபூரின் பிறந்த நாள் 6-ம் தேதி தனது 21-வது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். அம்மா இறந்து சில நாட்களே ஆன நிலையில் பிறந்த நாள் கொண்டாட எப்படி மனம் வந்ததோ என்று சமூக வலைத்தளங்களில் ஜான்விக்கு சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எப்போதும் ஜான்வி தனது அம்மாவுடன் மார்ச் 6-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஸ்ரீதேவி இறந்து ஓரிரு வாரங்களே ஆன  நிலையில் செவ்வாய்க்கிழமை தனது பிறந்தநாளை மும்பையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டாடினார் ஜான்வி.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜான்வி பகிர்ந்துள்ள ஒரு காணொளியில், எளிமையான உடையில் காணப்பட்டார். பிறந்த நாள் கேக்கை வெட்டுவதற்கு முன் ஜான்வி கண்களை மூடி மனமுருகி வேண்டிய படியிருக்கும் ஒரு புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT