செய்திகள்

'கோன் பனேகா க்ரோர்பதி’யில் கோடிகளை அள்ளிக் கொடுத்த நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

சினேகா

மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்த ஜெயா பச்சன் தற்போது மூன்றாவது முறையாக தேர்வாகவுள்ளார். அதற்காக அவர் தன் சொத்து விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்திய சினிமாவில் நீண்ட கலமாக சினிமாவில் நடித்து வரும் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சன் ஆகியோரின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி என்கிறது ஜெயா பச்சன் அளித்த விண்ணப்பம்.

நடிகர் அமிதாப் பச்சன் அவரது மனைவி ஜெயா பச்சனுக்கு ரூ.1,000 கோடி மதிப்புக்கு சொத்துகள் உள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி சார்பில் போட்டியிட ஜெயா பச்சன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்பு மனுவுடன், தனது சொத்துகள் குறித்த பட்டியலையும் பிரமாணப் பத்திரமாக அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: 'எனக்கும், எனது கணவர் அமிதாப் பச்சனுக்கும் ரூ.460 கோடிக்கும் மேல் அசையா சொத்துகள் உள்ளன. இதேபோல் ரூ.540 கோடிக்கும் மேல் அசையும் சொத்துகள் உள்ளன. அமிதாப் பச்சனிடம் ரூ.3.4 கோடி மதிப்புக்கு கைக்கடிகாரங்களும், என்னிடம் ரூ.51 லட்சம் மதிப்புக்கு கைக்கடிகாரங்களும் உள்ளன. 

அமிதாப் பச்சனிடம் ரூ.9 லட்சம் மதிப்புக்கு பேனாக்கள் உள்ளன. எனக்கும், எனது கணவருக்கும், பிரான்ஸ் நாட்டில் 3,175 சதுர மீட்டர் அளவுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. நொய்டா, போபால், புணே, ஆமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களிலும் சொத்துகள் உள்ளன. எனக்கு லக்னௌவில் ரூ.2.2 கோடி மதிப்புக்கு எனக்கு 1.22 ஹெக்டேர் விவசாய நிலமும், பாராபங்கி மாவட்டத்தில் அமிதாப் பச்சனுக்கு ரூ.5.7 கோடி மதிப்புக்கு 3 ஏக்கர் நிலமும் உள்ளது என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் ஜெயா பச்சன் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கடந்த 2012-ம் ஆண்டில் தெரிவித்திருந்த சொத்துகளின் மதிப்புகளைக் காட்டிலும், தற்போது ஜெயா பச்சனின் சொத்து மதிப்பு 2 மடங்கு அதிகரித்திருத்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மாநிலங்களவைக்கு நடந்த தேர்தலில், பாஜக எம்.பி. ரவீந்திர கிஷோர் தனக்கு ரூ.800 கோடி மதிப்புக்கு சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 

ஜெயா பச்சன் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படும்பட்சத்தில், அவர்தான் மிகவும் வசதிப்படைத்த மாநிலங்களவை எம்.பி.யாக கருதப்படுவார். தற்போது உடல் நலக் குறைவால் ஓய்வில் இருக்கிறார் அமிதாப் பச்சன். அமீர் கான் நடிப்பில் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் தயாராகி வரும் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' என்ற திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். அதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்று வரும் படிப்பிடிப்பில் கலந்துகொள்ள அவர் சென்றபோது உடல் நலிவுற்றார்.

அமிதாப்பின் தற்போதைய நிலைகுறித்து ஜெயா பச்சன் விளக்கமளித்தார். அவர் கூறியதாவது: 'அமிதாப் நலமாக உள்ளார். முதுகு வலி, கழுத்து வலி அவருக்கு உள்ளது. படத்துக்காக அணிந்த ஆடைகள் எடை கூடுதலாக இருந்ததால் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. மற்றபடி அவர் நலமாக உள்ளார் என்று கூறியுள்ளார்.' அமிதாப்பும் தனது ட்விட்டரில் தான் நலமாக உள்ளதாகவும் ரசிகர்கள் கவலைப்படவேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

SCROLL FOR NEXT