முகப்பு
செய்திகள்

நமது திரையரங்குகளில் இதர மொழிப் படங்கள் அதிகமாக வெளியாவது ஏன்?: ஒளிப்பதிவாளர் திரு பதில்

நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு தரமான படங்களை நாம் தயாரிக்க வேண்டும்.. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:55 PM
பகிர்:

பிரபல ஒளிப்பதிவாளர் திருவின் ஒளிப்பதிவில் சமீபத்தில் வெளியான படம் - மெர்க்குரி. இப்படத்துக்காக அதிகப் பாராட்டுகளைப் பெற்றுள்ள திரு பேட்டியளித்ததாவது:

தமிழில் அதிகப் படங்கள் செய்வதால் என்னால் ஹிந்தியில் கவனம் செலுத்த முடியவில்லை. 2013-ல் வெளியான கிருஷ் 3 படத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடிக்கும் Fanne Khan  படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறேன்.

ஹிந்திப் படங்களில் தயாரிப்புச் செலவு அதிகமாக இருக்கும். ஆனால் தமிழ்த் திரையுலகில் அதுபோல எப்போதும் நடப்பதில்லை. இதனால் இதர மொழிப் படங்கள் நமது திரையரங்குகளை எடுத்துக்கொண்டு விட்டன. Rangasthalam, Bharat Ane Nenu, Avengers போன்ற படங்கள் தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்துள்ளன. நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு தரமான படங்களை நாம் தயாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.