செய்திகள்

சர்ச்சைக்கு பெயர் போன இயக்குநர் புதிய சர்ச்சையில் சிக்கினார்!

சினேகா

வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமான 'கில்லிங் வீரப்பன்' படம் தொடர்பாக அதன் இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். 'கில்லிங் வீரப்பன்'. தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிய இந்தப் படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியானது.

படம் வெளியான சமயத்தில், எனது கணவர் வீரப்பன் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவே கில்லிங் வீரப்பன் படம் எடுக்கப்பட்டுள்ளது. யாரும் இந்தப் படத்தை பார்க்காதீர்கள் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியிருந்தார். இந்நிலையில் வீரப்பன் என்கவுண்டருக்கு உதவிய சண்முகப்பிரியா என்ற பெண் ராம் கோபால் வர்மா மீது புதிய புகாரை அளித்துள்ளார்.

'கில்லிங் வீரப்பன்' படத்தின் கதை தொடர்பாக ராம் கோபால் வர்மா தன்னுடன் ஆறு லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டதாகவும், ஆனால் ஒரு லட்சம் ரூபாய் பணம் மட்டும் இதுவரை தந்துள்ளார் எனவும், மீதி தொகையை  வழங்கவில்லை என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ராம்கோபால் வர்மாவிற்கு எதிராக கேஸ் போட்டிருந்தும், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரைப்பட நடிகர்கள் சங்கம் என எல்லா இடங்களிலும் முறையிட்டும் இது வரை தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று சண்முகப்பிரியா வருத்தம் அடைந்துள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT