செய்திகள்

சக நடிகர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி!

எழில்

பாலியல் தொல்லை தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்த நடிகை ராணி சில மணி நேரங்களில் தனது புகாரை வாபஸ் பெற்றார். 

சென்னை செங்குன்றம் பகுதியில் தொலைக்காட்சித் தொடரில் நடித்தபோது, நடிகர் சண்முகராஜன் தனக்குப் பாலியல் தொல்லை அளித்துத் தாக்கியதாக நடிகை ராணி, செங்குன்றம் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். 

நடிப்பு என்கிற பெயரில் சண்முகராஜன் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அவர் சொல்வதற்கு நான் உடன்படாததால் என்னைத் தாக்கினார் என்று செய்தியாளர்களிடம் ராணி பேட்டியளித்தார். ஆனால் சில மணி நேரங்களில் தனது புகாரை வாபஸ் பெற்றார் ராணி. சண்முகராஜன் தன்னிடம் மன்னிப்பு கோரியதால் புகாரை வாபஸ் பெற்றதாக ராணி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT