செய்திகள்

நவம்பரில் தீபிகா படுகோன்-ரண்வீர் சிங் திருமணம்

தினமணி

ஹிந்தி நடிகை தீபிகா படுகோன், நடிகர் ரண்வீர் சிங்கை நவம்பரில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
 இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் திருமண அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டனர்.
 அவர்கள் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
 குடும்பத்தினரின் வாழ்த்துகளுடன் நவம்பர் 14, 15 தேதிகளில் திருமணம் நடைபெறவுள்ளது. எங்கள் மீது அன்பை பொழிந்துவரும் ரசிகர்களுக்கு நன்றி. எங்களுடைய புதிய பயணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருமண அறிவிப்பை இவர்கள் வெளியிட்டுள்ளனர். திருமணம் எங்கே நடைபெறவுள்ளது என்பது குறித்த விவரம் அதில் இல்லை.
 காதலித்து வந்த இருவரும் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மௌனம் காத்து வந்த இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
 ராம் லீலா என்ற திரைப்படத்தில் முதல் முறையாக தீபிகாவும், ரண்வீரும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் ஆகிய படங்களில் இருவரும் நடித்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT