ஐஆர்ஐஎஸ் எனும் ஈவன்ட் மேனேஜ்மண்ட், நேச்சுரல்ஸ் மற்றும் எப்ஐடிஏ டிசைன் பள்ளி ஆகியவை இணைந்து கடந்த ஆறு ஆண்டுகளாக புகைப்படத்துக்கு ஏற்ற முகங்களை தேடும் முயற்சியை தொடங்கியுள்ளது.
இதில் வெற்றி பெறுபவர் 'என்டர்டெய்ன்மெண்ட்' உலகில் எளிதாக நுழையவும் வாய்ப்பாக அமைகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இப்போது மாடல்களாகவும், நடிகர், நடிகைகளாக திரையுலகில் வலம் வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் சென்னையின் முகம் (FACE OF CHENNAI) போட்டி நடைபெற்றது .
இதில் பல மாநிலங்களிலிருந்தும் 5000-த்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு கட்ட தேர்வுகளின் முடிவில் பெண்கள் பிரிவில் 'மிஸ் ஃபேஸ் ஆப் சென்னை 2018' விருதை ஸ்ருதி பெற்றார். 2-வது இடத்தை தாரிணியும், 3-வது இடத்தை பிரீத்தியும் பெற்றனர்.