செய்திகள்

சிம்பு, விஷால் என அடுத்தடுத்த படங்களை இயக்கவுள்ள சுந்தர்.சி

எழில்

அரண்மனை 2, கலகலப்பு 2 ஆகிய படங்களைச் சமீபத்தில் இயக்கிய சுந்தர் சி. அடுத்ததாக இரு படங்களை இயக்கவுள்ளார். 

சுந்தர் சி-யின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிம்பு. அவருக்கு ஜோயாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி, 2019 ஜனவரியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கடுத்து, விஷாலை வைத்து அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் சுந்தர் சி. இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். சிம்பு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் இந்தப் படம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலும் தமன்னாவும் இதற்கு முன்பு, கத்திச்சண்டை என்கிற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT