செய்திகள்

நடிகை ரம்பாவுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது: கணவர் தகவல்!

எழில்

நடிகை ரம்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் ரம்பா. 

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை 2010-ம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார் நடிகை ரம்பா. இந்தத் தம்பதியருக்கு லான்யா, சாஷா என இரண்டு பெண் குழந்தைகள். கருத்துவேறுபாடு காரணமாக, சிலகாலம் இருவரும் பிரிந்து வாழ்ந்தார்கள். இவர்களுடைய குடும்பப் பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது. இதன்பிறகு நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் இருவரும் சுமூகமாகி மீண்டும் இணைந்து வாழ ஆரம்பித்தார்கள்.

ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ரம்பாவுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 23-ம் தேதி டொரண்டோவில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாகச் சமூகவலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார் ரம்பாவின் கணவர். 40 வயது ரம்பாவும் இத்தகவலை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT