முகப்பு
செய்திகள்

ராட்சசி படத்தைத் தடை செய்ய வேண்டும்: காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

படத்தைத் தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், குறைந்தபட்சம் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கவேண்டும்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:33 AM
பகிர்:

ஜோதிகா நடித்துள்ள ராட்சசி படத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு ஆசிரியர்களைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் கெளதம் ராஜ் இயக்கியுள்ள படம் - ராட்சசி. இசை - ஷான் ரோல்டன். 

இந்நிலையில், ராட்சசி படத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு ஆசிரியர்களைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. படத்தைத் தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், குறைந்தபட்சம் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கவேண்டும். படத்தின் இயக்குநர் கெளதம் ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →