சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விமல் அண்மையில் படப்பிடிப்புக்காக ஹோட்டல் அறையில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார் விமல். அதே ஹோட்டலில் கன்னட நடிகர் அபிஷேக்கும் தங்கியிருந்துள்ளார். திடீரென்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பில் முடிந்தது. இச்சம்பவத்தின் போது விமல் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
நடிகர் அபிஷேக்கின் நண்பர்கள் இது குறித்து விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மூவர் மீது 294 பி என்ற குற்றப்பிரிவில் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹாட்டலில் உள்ள சிசிடிவி காமரா மூலம் இந்த விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விமல் தரப்பும் அபிஷேக் மீது புகார் அளித்துள்ளனர்.