செய்திகள்

திருமணமான 2 ஆண்டுகளில் 10-ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடிய சமந்தா!

Uma Shakthi

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா தம்பதியர் இரண்டாம் ஆண்டு திருமண வாழ்க்கையை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) கொண்டாடினர்.  

மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், சமந்தா தனது கணவருக்காக ஒரு இதயப்பூர்வமான அன்பான பதிவை தனது இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ளார்.

திருமண புகைப்படத்தைப் பகிர்ந்து, சமந்தா அதில் எழுதியுள்ளது: "வலுவாக, மேலும் வலுவாகத் தொடரும் உறவிது .. இரண்டு ஆண்டு நிறைவு இன்று ஆனால் இது பத்து ஆண்டின் கதை’ என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது இருவரும் காதலிக்கத் தொடங்கி, லிவ் இன் உறவில் இருந்து பின்னர் திருமணம் முடித்த வரையில் இந்தப் பயணம் அவர்களுக்கு இனியதாக இருக்கிறது என்று பொருள்படும்படி சாம் அந்தப் பதிவை எழுதியுள்ளார்.

மேலும் சமந்தா ஒரு விடியோவையும் வெளியிட்டுள்ளார், அதில் இருவரும் ஒரு பெப்பி பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'ஏ மாயா செஸாவே’ என்ற படத்தில்தான் சமந்தாவும் சைதன்யாவும் முதன்முதலாக ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.

பல ஆண்டுகளாக இந்த இணையர் டேட்டிங் செய்த பின்னர், கடந்த 2017-இல் கோவாவில் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT