செய்திகள்

ரசிகர் தற்கொலை: குடும்பத்தினருக்குத் தொலைபேசி மூலமாக விஜய் ஆறுதல்

தற்கொலை செய்துகொண்ட தனது ரசிகரின் குடும்பத்துக்குத் தொலைபேசி மூலமாக ஆறுதல்...

DIN

தற்கொலை செய்துகொண்ட தனது ரசிகரின் குடும்பத்துக்குத் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய்.

ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த பாலா, விஜய்யின் தீவிர ரசிகர். கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பாலா, தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன்பு, தலைவன் படம் பார்க்காமலே போகிறேன், தலைவனையும் என்று ட்வீட் வெளியிட்டிருந்தார். 

விஜய்யின் ரசிகரான பாலாவின் மரணத்துக்கு நடிகர்கள் ஷாந்தனு, சஞ்சீவ் எனப் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள். 

இந்நிலையில் பாலாவின் குடும்பத்துக்குத் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய். கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் மூலமாக பாலாவின் குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய், கால் மணி நேரத்துக்கும் மேலாகப் பேசி ஆறுதல் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT