செய்திகள்

ரசிகர் தற்கொலை: குடும்பத்தினருக்குத் தொலைபேசி மூலமாக விஜய் ஆறுதல்

தற்கொலை செய்துகொண்ட தனது ரசிகரின் குடும்பத்துக்குத் தொலைபேசி மூலமாக ஆறுதல்...

DIN

தற்கொலை செய்துகொண்ட தனது ரசிகரின் குடும்பத்துக்குத் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய்.

ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த பாலா, விஜய்யின் தீவிர ரசிகர். கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பாலா, தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன்பு, தலைவன் படம் பார்க்காமலே போகிறேன், தலைவனையும் என்று ட்வீட் வெளியிட்டிருந்தார். 

விஜய்யின் ரசிகரான பாலாவின் மரணத்துக்கு நடிகர்கள் ஷாந்தனு, சஞ்சீவ் எனப் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள். 

இந்நிலையில் பாலாவின் குடும்பத்துக்குத் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய். கள்ளக்குறிச்சி விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் மூலமாக பாலாவின் குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய், கால் மணி நேரத்துக்கும் மேலாகப் பேசி ஆறுதல் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT