படம் - facebook.com/VaruSarath 
செய்திகள்

ட்விட்டர், இன்ஸ்டகிராம் பதிவுகளை இழந்த நடிகை வரலக்‌ஷ்மி

என்னுடைய பதிவுகள் அனைத்தையும் இழந்துவிட்டேன். எனினும் இது புதிய தொடக்கம் என்றார்...

DIN


ஹேக் செய்யப்பட்ட தனது ட்விட்டர், இன்ஸ்டகிராம் கணக்குகளை மீட்டெடுத்துள்ளார் நடிகை வரலக்‌ஷ்மி. 

2012-ல் போடா போடி படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார் பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்‌ஷ்மி. தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டகோழி 2, சர்கார், மாரி 2 எனப் பல படங்களில் அவர் நடித்துள்ளார். கண்ணாமூச்சி என்கிற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார் வரலக்‌ஷ்மி. இப்படம் பற்றிய அறிவிப்பும் முதல் தோற்ற போஸ்டரும் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. மெர்சல் படத்துக்குப் பிறகு தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில் தனது ட்விட்டர், இன்ஸ்டகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பிறகு மீட்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் வரலக்‌ஷ்மி. இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

கடந்த சில நாள்களாக அலைச்சலாக இருந்தது. ஒரே நேரத்தில் என்னுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் கணக்குகளை இழந்துவிட்டேன். இது மிகவும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய கணக்குகளை மீட்டுக்கொடுத்த இன்ஸ்டகிராம் மற்றும் ட்விட்டருக்கு என் நன்றிகள். நேற்று ஒரு இணைப்பை கிளிக் செய்தேன். அது அங்கீகரிக்கப்பட்ட கணக்கிலிருந்து தான் வந்தது. அப்போதுதான் என்னுடைய ட்விட்டர், இன்ஸ்டகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. 

என்னுடைய பதிவுகள் அனைத்தையும் இழந்துவிட்டேன். எனினும் இது புதிய தொடக்கம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி மனு

மாணவிகளை சீருடையுடன் ஆட்சியரகத்துக்கு அழைத்து வந்த பெற்றோரை எச்சரித்த ஆட்சியா்

காரீப் பருவத்தில் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

இந்தியன் வங்கி சாா்பில் கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

SCROLL FOR NEXT