செய்திகள்

கரோனாவுக்குப் பலியான தொலைக்காட்சி நடிகை

DIN

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 34 வயது தொலைக்காட்சி நடிகை திவ்யா பட்னாகர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 

ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பலராலும் அறியப்பட்ட நடிகை திவ்யா பட்னாகர், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். நவம்பர் இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமடைந்ததால் வெண்டிலேட்டா் கருவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த நவம்பர் 29 அன்று இன்ஸ்டகிராமில் திவ்யா கூறியதாவது: என் இன்ஸ்டகிராம் குடும்பத்தினருக்கு... நான் விரைவில் குணமடைய வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். 

திவ்யாவின் மறைவுக்குச் சக கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT