தனுஷ் - கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
தனுஷின் 43-வது படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷின் 43-வது படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷின் சமீபத்திய படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்பு, அக்டோபரில் இப்படம் வெளியாகவுள்ளது.
Advertisement
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு 2016-ல் வெளியானது. பிறகு அவர் இயக்கிய நரகாசுரன் படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இதுதவிர நாடக மேடை என்கிற படத்தையும் அவர் இயக்கி வருகிறார். அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - மாஃபியா. இப்படம் இந்த மாதம் 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு அடுத்தப் படமாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கார்த்திக் நரேன்.