மும்பை பிரபாதேவி பகுதியில் பெமாண்ட் டவரின் 26-வது தளத்தில் 4 படுக்கை அறைகள் கொண்ட ஒரு ஃபிளாட்டை ரூ. 16 கோடிக்கு 2010-ல் வாங்கினார் பிரபல நடிகை தீபிகா படுகோன். அது 33 தளங்கள் கொண்ட கட்டடமாகும்.
2018-ல் இத்தாலியில் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் திருமணம் செய்துகொண்டார்கள்.
இந்நிலையில் தீபிகா படுகோன் வசிக்கும் பெமாண்ட் டவரில் மூன்று வருடத்துக்குத் தங்கும்படியாக ஒரு ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளார் ரன்வீர் சிங். முதல் இரு வருடங்களுக்கு ரூ. 7.25 லட்சமும் கடைசி வருடத்தில் ரூ. 7.97 லட்சமும் மாத வாடகையாகவும் தரவுள்ளார் ரன்வீர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.