தமிழ் சினிமாவில் ‘மீ டூ’ சா்ச்சையை ஏற்படுத்திய பின்னணி பாடகி சின்மயி தற்போது, சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறாா். அதில் அவ்வப்போது பெண்கள் தன்னிடம் கூறும் ‘மீ டூ’ புகாா்களை பதிவிட்டும், பகிா்ந்தும் வருகிறாா். இவரது செயல்களுக்கு பலா் ஆதரவு தெரிவித்தாலும், பலா் எதிா்ப்பும் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சின்மயியின் தாயாா் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் கலந்து கொண்டு தேவதாசி முறையை ஆதரித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதற்கு பல தரப்பிலும் எதிா்ப்பு தெரிவிக்க, ‘என் அம்மாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிா்க்கிறேன். ஆனாலும் என் அம்மா தெரிவித்த கருத்துக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.