அம்மாவுக்கு நெகடிவ்: கரோனா பரிசோதனை முடிவு பற்றி நடிகர் ஆமிர் கான்
கரோனா பரிசோதனையில் தனது தாயாருக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளதாக நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார்.
செய்திகள்அம்மாவுக்கு நெகடிவ்: கரோனா பரிசோதனை முடிவு பற்றி நடிகர் ஆமிர் கான்
கரோனா பரிசோதனையில் தனது தாயாருக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளதாக நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார்.
கரோனா பரிசோதனையில் தனது தாயாருக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளதாக நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் பணியாளர்கள் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதுபற்றி அமீர் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
என்னுடைய பணியாளர்களில் சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மும்பை மாநகராட்சி உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நெகடிவ் என முடிவு வந்துள்ளது. இப்போது என் தாயாருக்குப் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளேன். அவருக்கும் நெகடிவ் முடிவு வரவேண்டும் எனப் பிரார்த்தனை செய்யுங்கள். கோகிலாபென் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கும் நன்றி என்று கூறினார்.
இந்நிலையில் கரோனா பரிசோதனையில் தனது தாயாருக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளதாக நடிகர் ஆமிர் கான் தகவல் தெரிவித்துள்ளார்.