செய்திகள்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு?

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஒத்திவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஒத்திவைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. ஆஸ்கர் தரப்பில் இதுபற்றிக் கூறியதாவது: ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமான உள்ளன. எனினும் புதிய தேதிகள் குறித்த எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஆஸ்கர் விருதுக்கு விண்ணபிக்கும் படங்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தது ஆஸ்கர் அமைப்பு. அதன்படி அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்களும் ஆஸ்கர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. எனினும் இந்த வருடம் வெளியான படங்களுக்கு மட்டும் இது பொருந்தும். இந்த மாற்றம் தற்காலிகமானது என்றும் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT