ஒப்பனைக் கலைஞர் பாபுவின் மரணத்துக்கு நடிகை நதியா, நடிகர் ஷாந்தனு போன்றோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
மூத்த ஒப்பனைக் கலைஞர் பாபு சமீபத்தில் காலமானார். இதையடுத்து ட்விட்டரில் நடிகர் ஷாந்தனு கூறியதாவது:
நான் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு எனக்கு ஒப்பனை செய்தவர் மேக்அப் பாபு அண்ணா. விளம்பர உலகின் மிகச்சிறந்த ஒப்பனைக் கலைஞர். கேமராவின் பின்னணியில் பாடுபடுபவர்களில் ஒருவர்.
கடந்த மூன்று வாரத்துக்கு முன்பு கூட அவருடன் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் பணிபுரிந்தேன். வாழ்க்கையைக் கணிக்கவே முடியவில்லை என்று எழுதியுள்ளார்.
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி மற்றும் விளம்பரப் படங்களில் என்னுடன் பாபு பணிபுரிந்துள்ளார். நல்ல மனிதர் என்று நதியா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.