செய்திகள்

'பாலு எங்க போன? ஏன் போன?' - இளையராஜாவின் உருக்கமான விடியோ பதிவு

DIN

எஸ்.பி.பி. மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக தனது இரங்கல் செய்தியை விடியோ மூலமாக பதிவிட்டுள்ளார். 

சுமார் 50 ஆண்டுகளாக திரையுலகில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தன் குரலால் மக்கள் மனதில் இடம்பிடித்த 'பாடும் நிலா' பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், இசை உலகில் அவருடன் பயணித்த இசையமைப்பாளர் இளையராஜா தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள விடியோவில், 

சீக்கிரம் எழுந்து வா, உன்ன பாக்க நான் காத்திருக்கேன்னு சொன்னேன். நீ கேட்கல. போய்ட்ட.. நீ எங்க போன? கந்தர்வர்களுக்காக பாடுவதற்கு சென்றுவிட்டாயா? 

பேசுவதற்கு பேச்சு வரல, சொல்றதுக்கு வார்த்தை இல்ல. 

எல்லா துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதுக்கு இல்ல' என உருக்கமாக பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு!

SCROLL FOR NEXT