சின்னத்திரை நடிகை நவீனா போல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மிலே ஜப் ஹம் தும் என்கிற தொலைக்காட்சித் தொடரின் மூலம் கவனம் பெற்றவர் நவீனா போல். இந்நிலையில் கரோனாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார். நவீனா போல் இதுபற்றி கூறியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். உங்கள் அனைவருடைய பிரார்த்தனையும் எனக்குத் தேவை. அனைவரும் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.