முகப்பு
செய்திகள்

கரோனா அச்சுறுத்தல்: கங்கனா நடித்த தலைவி படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு

இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் தலைவி படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கங்கனா நடித்த தலைவி படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்துள்ளார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. 

விஜய் இயக்கியுள்ள இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.

தலைவி படம் ஏப்ரல் 23 அன்று வெளியாகவிருந்த நிலையில் அதன் வெளியீடு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் தலைவி படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தை எல்லா மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிட உள்ளோம். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல மாநிலங்களில் ஊரடங்கும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தயாரிப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →