செய்திகள்

கணவர் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றார் நடிகை ராதா!

கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் அளித்த புகாரை திரும்ப பெற்றுள்ளார் நடிகை ராதா. 

DIN

கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் அளித்த புகாரை திரும்ப பெற்றுள்ளார் நடிகை ராதா. 

‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘அடாவடி’ உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவா் நடிகை ராதா (38). இவா் சென்னை சாலிகிராமம், லோகையா தெருவில் கணவரைப் பிரிந்து தனது மகன், தாயுடன் வசித்து வருகிறாா். எண்ணூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வசந்தராஜா (40) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் வீட்டிலேயே தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனராம். பின்னா், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினராம். எனினும் வசந்தராஜா, நடிகை ராதா மீது சந்தேகபட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதில் மன வேதனை அடைந்த ராதா, தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வரும் வசந்தராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த விசாரணையில், ‘வசந்தராஜா ஏற்கெனவே திருமணமாகி மனைவி, இரு குழந்தைகளுடன் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வருவது தெரியவந்தது. மேலும் வசந்தராஜா, திருவான்மியூா் காவல் நிலையத்தில் பணிபுரிந்துபோது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வசந்தராஜா, தனது மனைவிக்கு தெரியாமல், ராதாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளாா். கடந்த மாதம் வரை வடபழனி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த வசந்தராஜா, பல்வேறு பிரச்னைகளில் சிக்கியதால் அங்கிருந்து எண்ணூா் காவல் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்’ என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் நிலையத்தில் அளித்த புகாரை இன்று திரும்பப் பெற்றுக்கொண்டார் நடிகை ராதா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT