நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதால் தற்போது சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் அப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்த 'நாங்க வேற மாறி' பாடல்
'பொய்க்கால் குதிரை' எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் முதல்பார்வையை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதில் பிரபுதேவா ஒரு கால் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனத் தெரிய வந்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய எதிரிபார்ப்பு கிளம்பியிருக்கிறது.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் நாயகிகளாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக பல்லூ, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். படத்தை மினி ஸ்டுடியோஸ் மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள்.