செய்திகள்

2 கோடி பார்வையாளர்கள்: சாதனை புரிந்த ‘புஷ்பா டிரைலர்’

DIN

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியான 15 மணி நேரத்திற்குள் 2 கோடிப் பார்வையாளர்களைக் கடந்து இந்திய சினிமாவில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள படம் புஷ்பா. இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். செம்மரக் கடத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. 

வருகிற டிச.17 வெளியாக உள்ள முதல் பாகத்தின் டிரைலரை நேற்று(டிச.6) படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் தமிழ்  , மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் உருவான டிரைலர் மட்டுமே வெளியானது. இந்நிலையில் இன்று காலை தெலுங்கு மொழி டிரைலரை வெளியிட்டனர்.

தற்போது 5 மொழிகளில் உருவான ‘புஷ்பா’ திரைப்படத்தின் டிரைலர், அது வெளியிடபட்ட 15 மணி நேரத்திற்குள்ளாக 2 கோடிப் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. 

முக்கியமாக தெலுங்கில் வெளியான 4 மணி நேரத்தில் 85 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT