செய்திகள்

படப்பிடிப்பில் இருந்து திடீரென காணாமல்போன மீரா மிதுன்: காவல் நிலையத்தில் இயக்குநர் புகார்

படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நடிகை மீரா மிதுன் காணாமல் போனதாக இயக்குநர் புகார் அளித்துள்ளார். 

DIN

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தனது நடவடிக்கைகளால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். 

இந்த நிலையில் பேயைக் காணோம் என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது வந்ததது. இந்தப் படத்தை செலவ அன்பரசன் என்பவர் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவந்த நிலையில் திடீரென படப்பிடிப்புத் தளத்தில் இருந்து மீரா மிதுன் காணாமல்போகியுள்ளார். அவருடன் வந்த 6 உதவியாளர்களையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மீரா மிதுன் மீது இயக்குநர் செல்வ அன்பரசன் புகார் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT