செய்திகள்

கோயில்களைப் பக்தர்களிடம் ஒப்படையுங்கள்: சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு

சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்தை முற்றிலும் ஏற்கிறேன். பக்தர்களிடம் விட்டுவிடுங்கள்...

DIN

தமிழகக் கோயில்களைப் பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், இன்று ட்விட்டரில் கூறியதாவது: 

1,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது என்றார்.

இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த நடிகர் சந்தானம், ட்விட்டரில் கூறியதாவது:

சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்தை முற்றிலும் ஏற்கிறேன். பக்தர்களிடம் விட்டுவிடுங்கள். ஏராளமான கோயில்களில் ஒருவேளை பூஜை கூட நிகழாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. பராமரிப்பும் பாதுகாப்பும் ஓரளவுதான் செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம்: நாடாளுமன்றத்தில் மசோதா விரைவில் அறிமுகம்

மார்கழி சிறப்பு! முருகப்பெருமானுக்கு வெந்நீர் அபிஷேகம் நடக்கும் கோயில்!!

வாய்ப்புகள் காத்திருக்கு இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

SCROLL FOR NEXT