செய்திகள்

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்குத் தமிழக அரசு அனுமதி!

DIN

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை அடுத்து கடந்த மாா்ச் மாதம் முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. அதன்படி, கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் திரைப்படங்களையும், திரையரங்குகளையும் நம்பி பணியாற்றுவோரின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனா். அதனை ஏற்று மாவட்ட நிா்வாகத்தின் முன்அனுமதி பெற்று 50 சதவீத இருக்கைகளுடன் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க திரையரங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

திரையரங்குகளில் 100 சதவீதப் பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. நடிகர் விஜய், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். சிம்புவும் இதுதொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  திரையரங்குகளில் அரசு வலியுறுத்தியுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT